Sunday, April 21, 2024

கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது

 

Kanmalai Christian Church

Word of God : Pastor Micheal

Date: 21.04.2024

அப்போஸ்தலர் 11:21
கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

1. கர்த்தருடைய கரம் உங்கள் பிள்ளையோடே இருக்கும் 

பிள்ளைகள் நிமித்தம் வீட்டிலே மாற்றம் உண்டாகும் 

லூக்கா 1:60
அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள்.

லூக்கா 1:61
அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,

லூக்கா 1:62
அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.

லூக்கா 1:63
அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

லூக்கா 1:64
உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.

லூக்கா 1:65
அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.

லூக்கா 1:66
அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.

கர்த்தருடைய கரம் பிள்ளையோடே இருப்பதினால் பிள்ளைகள் நிமித்தம் வீட்டிலே ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நிமித்தம் நாவின் கட்டுகள் அவிழ்க்கப்படும். பிள்ளைகளின் நிமித்தம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவீர்கள். பிள்ளைகளின் நிமித்தம் கர்த்தருடைய நாமத்தை ஸ்தோத்தரிப்பீர்கள். பிள்ளைகளின் நிமித்தம் தீர்க்கதரிசனம் உரைப்பீர்கள். 

2. தேவனுடைய தயவுள்ள கரம் உங்கள் மேல் இருக்கும் 

 உங்களுக்கு வேண்டியவைகளை கட்டளையிடுவார் 

எஸ்றா 8:18
அவர்கள் எங்கள்மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் குமாரனாகிய மகேலியின் புத்திரரில் புத்தியுள்ள மனுஷனாகிய செரபியாவும் அவன் குமாரரும் சகோதரருமான பதினெட்டுப்பேரையும்,

நெகேமியா 2:8
தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.

I சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

தேவனுடைய தயவுள்ள கரம் உங்கள் மேல் இருப்பதால், உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும் நம் தேவன் கட்டளையிடுவார். உங்கள் சூழ்நிலைகளை கர்த்தர் மாற்றி அமைப்பார். உங்கள் எல்லா விதமான காரியங்களையும் அனுகூலமாய் கைகூடி வார்செய்வார். 

3. தேவனுடைய கரம் உங்கள் மேல் நன்மையாக இருக்கும் 

நீங்கள் கேட்டவைகளை கொடுப்பார் 

நெகேமியா 2:18
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.

சங்கீதம் 103:3
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

சங்கீதம் 103:4
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

சங்கீதம் 103:5
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.

எஸ்றா 7:6
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

தேவனுடைய கரம் உங்கள் மேல் நன்மையாக இருக்கும். அவர் உங்கள் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து, உங்கள் நோய்களை எல்லாம் குணமாக்கி, உங்கள் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு உங்களை கிருபையினாலும், இரக்கங்களினாலும் முடிசூட்டி நன்மையினால் திருப்தியாக்குவார். தேவனுடைய கரம் உங்கள் மேல் நன்மையாய் இருப்பதால் நீங்கள் கேட்டவைகளை எல்லாம் கொடுக்கும். 

4. கர்த்தருடைய கரம் உங்கள் மேல் இருந்து திடப்படுத்தும் 

உங்களை திடன்கொள்ள செய்வார் 

எஸ்றா 7:28
அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடே கூடவரும்படி சேர்த்துக்கொண்டேன்.

கர்த்தருடைய கரம் உங்கள் மேல் இருப்பதினால் எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலை வந்தாலும் சரி அவர் உங்களை திடன் கொள்ள செய்வார். கர்த்தருடைய கரம் உங்கள் மேல் இருக்கும் என்று சொன்னால் அநேகரை உங்கள் சார்பிலே அழைத்துக் கொண்டு வரவும், உங்களுக்காக நிற்கும்படியாகவும், உங்களுக்காக சாட்சியிடும்படியாகவும், உங்களுக்காக பரிந்து பேசும்படியாகவும், உங்களுக்காக நன்மையானதை செய்யும்படியாகவும் கர்த்தர் செய்வார் ஆகவே நீங்கள் சோர்ந்து போக வேண்டாம், திடன் கொள்ளுங்கள், கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். 







Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment