Sunday, February 12, 2023

கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்

 

Kanmalai Christian Church

Word of God: Pastor Jachin Selvaraj

Date:12.02.2023

சங்கீதம் 32:10
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.

நீதிமொழிகள் 27:3
கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

சங்கீதம் 55:22
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

சங்கீதம் 33:18
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.  அந்த கிருபை மாத்திரம் நமக்கு கிடைத்தால் போதும். அந்த கிருபை நம்மை நிரப்பினால் போதும். வாழ்க்கையில் பாரங்கள் நமக்கு  நேரிடும் பொழுது விசுவாசம் குறைகிறது. நமக்கு தடையாக சூழ்நிலைகள் நம்மை அழுத்த பார்க்கும். அது நம்மை முன்னேறி போக விடாதபடி பாரமாக இருக்கும். ஆனாலும் சோர்ந்து போக வேண்டாம் கர்த்தர் மேல் உங்கள் பாரத்தை எல்லாம் வைத்து விடுங்கள், அவர் உங்களை ஆதரிப்பார். அவர் நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.  

1. கர்த்தரிடத்தில் நாம் அன்புகூருகிறவர்களாக இருக்க வேண்டும் 

I இராஜாக்கள் 3:5
கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.

I இராஜாக்கள் 3:3
சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.

சாலமோன் கர்த்தரிடத்தில் அன்பு கூறுகிறவராக காணப்பட்டார். நம்முடைய முதலாவது அன்பு அது ஆண்டவரிடத்தில் இருக்க வேண்டும். நாம் தேவனிடத்தில் அன்பாய் இருக்கிறோமா என்பதை நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். சாலமோன் தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளின் படி நடந்தான் என்று நாம் இங்கே பார்க்கிறோம். அது போல நாமும் ஆண்டவரின் கட்டளைகளை கைக்கொண்டு நடக்க வேண்டும்.  

2. கர்த்தரிடத்தில் நாம் ஐக்கியமாக இருக்க வேண்டும் 

ஆதியாகமம் 37:34
தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

ஆதியாகமம் 37:4
அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.

ஆதியாகமம் 37:5
யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.

ஆதியாகமம் 37:8
அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.

ஆதியாகமம் 45:27
அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.

ஆதியாகமம் 45:28
அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.

இங்கே யாக்கோபு தன் குடும்பத்தில் ஏற்பட்டதான இழப்பு என்கிற சூழ்நிலையில் இருக்கிறதை நாம் பார்க்கிறோம். தன் சொந்த சகோதரர்களே யோசேப்புக்கு சத்துருக்களாக மாறி விட்டார்கள். யோசேப்பு கண்ட சொப்பனத்தின் நிமித்தமாக அவன் சகோதரர்கள் அதிகமாய் பகைத்தார்கள். கர்த்தர் யோசேப்போடே இருந்தார். எந்த இடத்திலே யோசேப்பு அடிமையாய் சென்றாரோ அதே இடத்தில் அதிபதியாய் இருக்க செய்தார்.யோசேப்போடு கர்த்தர் இருந்தபடியால் பாவமானது அவரை மேற்க்கொள்ளவில்லை, ஞானமாய் நடந்து கொள்ள கர்த்தர் கிருபை கொடுத்தார். அவர் செய்கிற காரியத்தை எல்லாம் கர்த்தர் வாய்க்கப்பண்ணினார். நாமும் யோசேப்பை போல கர்த்தரோடு கூட ஐக்கியமாக இருப்போம் என்று சொன்னால் தேவன் நம்மோடு கூட இருந்து நாம் எங்கு வெட்கப்பட்டோமோ அதே இடத்தில் நம்மை உயர்த்தி ஆசீர்வதிக்க வல்லவராய் இருக்கிறார். யோசேப்பு உயிரோடு இருக்கிறார் என்ற செய்தியை கேட்ட பொழுது யாக்கோபின் ஆவி உயிர்த்தது என்று நாம் இங்கே பார்க்கிறோம் நமக்கு கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் தாமதித்தாலும் அதற்காக காத்து இருப்போம் கர்த்தருடைய கிருபையே  நம்பி இருப்போம் ஏற்ற வேளையிலே தேவன் நம்மை உயர்த்துவார். 

3. கர்த்தருடைய நடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும் 

அப்போஸ்தலர் 2:38
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

அப்போஸ்தலர் 12:10
அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.

இயேசுவின் முதற் சீடராய் இருந்த பேதுரு சூழ்நிலை வந்த பொழுது இயேசுவை மறுதலித்தார். ஆனாலும் மறுதலித்த பேதுருவை ஆண்டவர் வல்லமையாய் பயன்படுத்தினார். முதல் பிரசங்கியாராக கர்த்தர் அவரை மாற்றினார். ஆண்டவரின் வழிநடத்துதல் பேதுருவிற்கு இருந்தது நம்முடைய வாழ்க்கையிலும் சரியான பாதையில் நம்மை நடத்துபடியாக நம்மை நாம் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்பொழுது தேவன் அவர் தம் வழியில் நம்மை வழிநடத்துவார். 






Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment