Sunday, February 19, 2023

என்னுடைய ஆவியினாலேயே ஆகும்

 

Kanmalai Christian Church

Word of God: Pastor Johnson Israel

Date: 19.02.2023

சகரியா 4:6
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 4:7
பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

செருபாபேலுக்கு முன்பாக பெரிய பர்வதமும் சமபூமி ஆகிவிடும் அது போல உங்களுக்கு விரோதமாக எப்படிப்பட்ட காரியங்கள் எழும்பினாலும் சரி ஆண்டவருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு முன்னால் அவை சமபூமி ஆகிவிடும். எதை குறித்தும் நாம் கவலைப்பட தேவை இல்லை, பலத்தினாலும், பராக்கிரமத்தினாலும் அல்ல கர்த்தருடைய ஆவியினாலே ஆகும். ஆவியானவர் நம்மை வழிநடத்துவார். ஆவியானவர் நமக்குள் இருக்கிறார். உங்களுக்கு முன்பாக எப்படிப்பட்ட பர்வதங்கள் எழும்பினாலும் அவை சமபூமியாய் போய் விடும். 

குமாரனுடைய ஆவியை நம் இருதயத்தில் வைப்பார் 

கலாத்தியர் 4:6
மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

செப்பனியா 3:12
உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.

யாத்திராகமம் 3:12
அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

யாத்திராகமம் 3:13
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.

யாத்திராகமம் 3:14
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

யோவான் 6:63
ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

ஏசாயா 61:3
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

தேவன் அப்பா பிதாவே என்று கூப்பிடத்தக்க தம்முடைய குமாரனுடைய ஆவியை நம்முடைய இருதயத்தில் வைத்து இருக்கிறார். இயேசுவின் பன்னிரு சீஷர்களுக்கும் கிடைக்காத இந்த பாக்கியம் நமக்கு கிடைத்து இருக்கிறது. தேவன் எப்போதும் நம்முடனே கூட இருக்கிறார். அவர் நாமத்தின் மேல் நம்பிக்கை வைக்கும் பொழுது அவர் நம்மை நடத்துவார். 

புதிய ஆவியை கட்டளையிடுவார் 

எசேக்கியேல் 36:26
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

எசேக்கியேல் 36:27
உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.

பிரசங்கி 9:3
எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.

பிரசங்கி 3:11
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

இன்றைக்கு தேவன் நமக்கு நவமான இருதயத்தை அளிக்க சித்தம் வைத்துள்ளார். கேடும், கிறுக்குள்ளதுமாய் இருக்கிற நம் இருதயத்தை கர்த்தர் மாற்றுவார். அவர் நமக்கு புதிய ஆவியை கட்டளையிட்டு கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை நமக்கு தருவார். நாம் ஏன் இன்னும் ஆசீர்வாதங்களை தேவனிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடிவதில்லை நம் இருதயம் தேவனோடு இல்லாமல் உலகத்தின் காரியங்களின் மேல் இருக்கிறது, தேவனுக்கு கீழ்ப்படிவது இல்லை. நம்மை நாமே இன்றைக்கு ஆராய்ந்து பாப்போம் என்று சொன்னால் கர்த்தர் நம் இருதயங்களை மாற்றுவார். 

கிருபையின் ஆவியையும், விண்ணப்பத்தின் ஆவியையும் ஊற்றுவார் 

சகரியா 12:10
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

ரோமர் 8:26
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

எபிரெயர் 8:10
அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.

எபிரெயர் 8:11
அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.

எபிரெயர் 8:12
ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கிருபையின் ஆவியையும், விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றப்போகிறார். ஜெப ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள் தேவனுடைய சமூகத்தில் அமர்ந்திருங்கள். நாம் கடந்து போய் கொண்டு இருக்கிற சூழ்நிலை ஆவியானவருக்கு அறிந்து இருக்கிறார். நீங்கள் ஆவியானவருக்கு இடம் கொடுங்கள் ஆவியானவர் நம்முடைய பலவீனங்களில் நமக்கு உதவி செய்வார். அவர் நமக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சோடு வேண்டுதல் செய்வார். ஆவியானவருக்கு இடம் கொடுங்கள் உங்கள் காரியங்கள் எல்லாம் தேவன் நிறைவேற்றுவார். 








Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment