Thursday, September 1, 2022

உனக்கு அதைத் தருவேன்

 

கன்மலை கிறிஸ்துவ சபை செப்டம்பர் மாத வாக்குத்தத்தம் 

Word of God: Brother Micheal

Date: 01.09.2022

ஆதியாகமம் 13:17
நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.

கர்த்தர் ஆபிரகாமுக்கு முகமுகமாய் சொன்ன வார்த்தை நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார். எம்மட்டும் உங்களால் நடக்க முடியுமோ நடவுங்கள் அதைக்கொள்ளை பொருளாக கர்த்தர் இந்த மாதம் தரப்போகிறார். 

அவர் எதை நமக்கு தருவார் ?

1. உனக்கு இளைப்பாறுதலைத் தருவார் 

யாத்திராகமம் 33:13
உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.

யாத்திராகமம் 33:14
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.

யாத்திராகமம் 33:15
அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.

யாத்திராகமம் 33:16
எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.

மத்தேயு 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

இந்த மாதம் கர்த்தருடைய சமூகம் நமக்கு முன்பதாக செல்லும். அவர் வழிநடத்துதலை இந்த மாதம் நீங்கள் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். இந்த செப்டெம்பர் மாதம் முழுவதும் தேவன் உங்களுக்கு இளைப்பாறுதலை தந்து வழிநடத்த போகிறார். சாலமோன் ஆட்சி காலத்தில் ஒரு யுத்தமும் இல்லாமால் அவன் இல்லையெங்கிலும் கர்த்தர் இளைப்பாறுதலை கட்டளையிட்டார். அதே தேவன் நமக்கும் இந்த மாதம் இளைப்பாறுதலை தந்து நம்மை வழிநடத்துவார். 

2. உனக்கு  ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் தருவார் 

II நாளாகமம் 1:10
இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.

II நாளாகமம் 1:11
அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும்,

II நாளாகமம் 1:12
ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

இந்த மாதம் கர்த்தர் உங்கள் விருப்பங்கள் என்னவோ அதை  நிறைவேற்றப்போகிறார். கர்த்தர் சாலமோனிடம் நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் கேட்டபடியால் அதை உனக்கு தந்தேன் அதுமட்டும் அல்லாமல் நீ உனக்கு முன்னும், உனக்கு பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்று சொன்னார். அதே போல உங்களுக்கு இல்லாத ஐசுவரியத்தை கர்த்தர் இந்த மாதம் தரப்போகிறார். நீங்கள் இதுவரை கேட்காத சம்பத்தையும், கனத்தையும் தந்து தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். 

3. உனக்கு இரட்டிப்பான நன்மையை தருவார் 

சகரியா 9:10
எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.

சகரியா 9:11
உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.

சகரியா 9:12
நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.

நம்பிக்கையுடைய சிறைகளே நீங்கள் எல்லோரும் அரணுக்கு திரும்புங்கள், கர்த்தருடைய சமூகத்திற்கு திரும்புங்கள், கர்த்தரையே நோக்கி பாருங்கள் கர்த்தர் இரட்டிப்பான நனமையை உங்களுக்காக இந்த மாதம் வைத்து இருக்கிறார். வாயை நன்மையினாலே திருப்தியாக்குகிற தேவன் இரட்டிப்பான நன்மைகளை அருளி நம்மை ஆசீர்வதிப்பார். 

4. உனக்கு தேவையான பணத்தைத் தருவார் 

லூக்கா 10:33
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,

லூக்கா 10:34
கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.

லூக்கா 10:35
மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.

கர்த்தர் இந்த மாதம் உங்கள் மேலே மனதுருகி இருக்கிறார், உங்கள் காயங்களை எல்லாம் கட்டி கர்த்தரே தன்னுடைய சுயவாகனத்தில் உங்களை ஏற்றி உங்களை பாராமரிப்பார். இந்த மாதம் கர்த்தருடைய பராமரிப்பை நீங்கள் காண்பீர்கள், உங்களுக்கு எதுவும் நடக்காதபடிக்கு, உங்களை பராமரிக்கும் படி , உங்கள் குடும்பத்தை பராமரிக்கும் படி, அவர் மனதுருகி உங்கள் கிட்டே வந்து இருக்கிறார். நமக்கு தேவையான பணத்தை ஆண்டவர் இந்த மாதம் தந்து நம் தேவைகள் யாவற்றையும் சந்திக்கப்போகிறார். 

5. உனக்கு பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களைத் தருவார் 

மத்தேயு 16:18
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

மத்தேயு 16:19
பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை கர்த்தர் இந்த மாதம் உங்களுக்கு தரப்போகிறார், ஒரு அதிகாரமும், ஒரு வல்லமையும் இந்த செப்டெம்பர் மாதம் உங்களுக்குள் குடியிருப்பதை காண்பீர்கள். அநேக உபத்திரவங்கள்  நடந்தாலும் பிசாசானவன் உங்களை தொடமுடியாது நாம் வெறும் மணலிலே கட்டப்பட்ட வீடு அல்ல கற்பாறையின் மேலே வீடாய் இருக்கிறபடியினாலே நாம் அசைக்கப்படுவதில்லை. 





Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment