Wednesday, August 3, 2022

ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

 

Kanmalai Christian Church

Word of God : Brother Micheal

Date:31.07.2022

எபேசியர் 4:4
உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;

எபேசியர் 4:5
ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

எபேசியர் 4:6
எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நாம் எல்லாரும் ஒரே அவயங்களாய் இருக்கிறோம். நாம் எல்லாரும் ஒரே பரிசுத்த ஆவியை உடையவராய் இருக்கிறோம். நமக்கு ஒரே ஒரு தெய்வம் தான் கர்த்தராகிய கிறிஸ்து இயேசு என்கிற நாமம் மாத்திரமே. நம் எல்லாருக்கும் ஒரே ஒரு விசுவாசம் தான் ஒரு நித்திய பரலோகம் உண்டு அந்த லக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம். நமக்கு ஒரே ஞானஸ்நானம் உண்டு. நமக்கு ஒரே தேவனும், ஒரே பிதாவும் அவர் நம் எல்லார்க்குள்ளும் வாசமாய் இருக்கிறவர். 

I தீமோத்தேயு 2:3
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

I தீமோத்தேயு 2:4
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

I தீமோத்தேயு 2:5
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு நம்மை மனிதர்கள் நம்மை இரட்சிப்பின் பாதையில் வழிநடத்தக்கூடும் ஆனால் இரட்சிக்கப்பட்ட பிறகு ஆவியானவர் ஒருவரே உங்களை வழிநடத்தக்கூடும். தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. வேதத்திலே யார் யார் எப்படி இந்த ஒரே ஞாஸ்நானத்தை எடுத்தார்கள் என்பதை நாம் இங்கே தியானிக்கலாம். 

1. ஞானவானாகிய சவுல் - 
கண்கள் திறக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றார் 

அப்போஸ்தலர் 9:17
அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.

அப்போஸ்தலர் 9:18
உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.

நீங்கள் பிறந்த நாள் முதல் இந்நாள் வரை பல வழிகளில் நடந்து இருக்கலாம். பல காரியங்களை பார்த்து இருக்கலாம். பல கல்வியில் சிறந்து இருக்கலாம்.  நீங்கள் வந்த வழியிலே உங்களுக்கு தர்சனமான இயேசுவாகிய கர்த்தர் இந்நாள் வரையில் வழிநடத்தி கொண்டு வருகிறார். இங்கே நாம் வாசிக்கிறோம் சவுலின் கண்கள் திறக்கப்பட்டு அவன் ஞானஸ்நானம் பெற்றான் என்று, அது போல இன்றைக்கு நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படவேண்டும். பூமிக்குரியதை நாம் காணாமல் மறுமைக்குரியதை காணவேண்டும். அப்படி திறக்குமானால் நீங்கள் கர்த்தரால் பவுலைப்போல கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக மாறுவீர்கள். தேவன் உங்களை கொண்டு அவர் சித்தத்தை நிறைவேற்றுவார். சவுல் காமலியேல் பாதத்தில் அமர்ந்து நியாப்பிரமான சாஸ்திரங்களை நன்கு கற்று தேர்ந்தவர். இப்படிப்பட்ட ஞானவானாய் இருந்த சவுலை கர்த்தர் இரட்சித்தார். 

2. மாயவித்தைக்காரன் - 
பிரசங்கத்தை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றான் 

அப்போஸ்தலர் 8:9
சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியாநாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.

அப்போஸ்தலர் 8:12
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

அப்போஸ்தலர் 8:13
அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.

அப்போஸ்தலர் 8:14
சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

அப்போஸ்தலர் 8:15
இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

அப்போஸ்தலர் 8:16
அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

அப்போஸ்தலர் 8:17
அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.

சீமோன் என்ற பேர் கொண்ட மனுஷன் பெரிய மாயவித்தைக்காரனாய் இருந்து தன்னை ஒரு பெரியவன் என்று சொல்லி சமாரியா நாட்டு ஜனங்களை பிரம்மிக்கும்படியான காரியங்களை செய்து வந்தான். இதனால் இவன் தான் தேவனுடைய பெரிதான சக்தி என்று நம்பி சிறியோர் முதல் பெரியோர் வரை அவனுக்கு செவிகொடுத்து வந்தார்கள். அவனை மதித்து வந்தார்கள். தேவனுடைய இராஜ்யத்தை பற்றியும், இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து பிலிப்பு பிரசங்கித்த பொழுது அந்த பிரசங்கத்தை விசுவாசித்து புருஷரும், ஸ்த்ரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள். சீமோனும் பிலிப்பை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பை பற்றிக்கொண்டு அவனால் நடந்த அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்டு பிரம்மித்தான். 

இன்றும் சீமோனை போன்ற அநேக மாயவித்தை காரர்கள் பலர் இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் என்பதனை அறிந்துகொண்டு அவரை பற்றிக்கொண்டு இரட்சிக்கப்படுவதை நாம் கேளிவிப்படுகிறோம் அல்லவா. சமாரிய ஜனங்கள் தேவவசனத்தை ஏற்று கொண்டு இரட்சிக்கப்படுவதை அறிந்த எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்கள் பேதுருவையும் யோவானையும் அங்கு அனுப்புகிறார்கள். அவர்கள் வந்த பொழுது அந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியை பெறாமல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றதை அறிந்து அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளும் படியாக அவர்களுக்காக ஜெபம் பண்ணி அவர்கள் மேல் அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். 

அதுபோல நீங்களும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியை இதுவரையிலும் பெறாதவர்களாய் இருந்தால் வாஞ்சித்து, காத்திருந்து ஜெபித்து கேட்டு கர்த்தரிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள், மாம்சமான யாவர் மேலும் தம் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்ன தேவன் உங்களையும் பரிசுத்த ஆவியினால் நிரப்புவார். 

3. மந்திரி - முழு இருதயத்தோடு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார் 

அப்போஸ்தலர் 8:36
இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

அப்போஸ்தலர் 8:37
அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;

அப்போஸ்தலர் 8:38
இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.

அப்போஸ்தலர் 8:39
அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.

கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி நீ எழுந்து தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்கிறார்.  கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து ஊருக்கு திரும்பி போகும் வழியில் தன்னுடைய இரதத்தில் உட்கார்ந்து ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்து கொண்டு இருந்தான். ஆவியானவர் பிலிப்பை நோக்கி நீ அந்த இரதத்துடனே சேர்ந்துக்கொள் என்றார். பிலிப்பு ஓடி போய் அந்த இரதத்துடனே சேர்ந்துகொண்டார், பிலிப்பு மந்திரியை நோக்கி நீ வாசிக்கிற இந்த ஏசாயா ஆகமத்தின் கருத்து உனக்கு தெரியுமா என்று கேட்டார். அதற்கு மந்திரி ஒருவர் எனக்கு தெரிவிக்காவிட்டால் எனக்கு எப்படி இதன் கருத்து புரியும் என்று கூறி பிலிப்பை தன்னோடு அமரும்படியாக வேண்டிக்கொண்டான். பிலிப்பு இயேசுவை குறித்து மந்திரிக்கு பிரசங்கிதான், அவர்கள் வழி நடந்து போகையில் தண்ணீர் உள்ள ஒரு இடத்தருகே வந்தார்கள் மந்திரி பிலிப்பை நோக்கி இதோ தண்ணீர் இருக்கிறதே நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை இருக்கிறதா என்று கேட்டார், அதற்கு பிலிப்பு  நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது மந்திரி இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொன்னார். பின்னர் பிலிப்பு அந்த மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்ததாக பார்க்கிறோம்,  

4.பாவிகள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு -  
பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறுகிறார்கள்  

மத்தேயு 3:2
மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான்.

மத்தேயு 3:5
அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,

மத்தேயு 3:6
தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

மத்தேயு 3:11
மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

அப்போஸ்தலர் 2:38 
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

யோவான் பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது எல்லோரும் மனம்திரும்புங்கள் என்று பிரசங்கித்தார், . அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் யோவானிடத்தில் போய் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஞானஸ்நானம் பெற்றார்கள். அதேபோல் பெந்தேகோஸ்தே என்னும் நாளில் பேதுருவின் பிரசங்கத்தை கேட்டு ஏறக்குறைய மூவாயிரம் பேர் மனம் திரும்பி கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் பாவமன்னிப்புக்கென்ற ஞாஸ்நானத்தை பெற்றார்கள். 

5. இயேசு கிறிஸ்து -  நீதியை நிறைவேற்ற ஞானஸ்நானம் பெற்றார் 

மத்தேயு 3:13
அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

மத்தேயு 3:14
யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.

மத்தேயு 3:15
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

மத்தேயு 3:16
இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

இயேசு யோவானிடத்தில் ஞானஸ்நானம் பெரும்படியாக யோர்தானில் அவனிடத்தில் வந்தார். அப்பொழுது யோவான் அவருக்கு தடை செய்து நான் உம்மிடத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டி இருக்க நீர் என்னிடத்தில் வரலாமா என்று கேட்டான், அதற்கு இயேசு இப்பொழுது இடங்கொடு இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்று சொன்னார், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு எல்லாம் ஒரு மாதிரியை வைத்து விட்டு சென்று இருக்கிறார், இப்படியாக ஒரே ஞானஸ்நானம் என்ற நீதியை இயேசு கிறிஸ்து நிறைவேற்றி யோவானிடத்தில் ஞானஸ்நானம் பெற்றார், கர்த்தர் ஒருவரே, விசுவாசம் ஒன்றே, ஞாஸ்நானமும் ஒன்றே நீங்களும் தேவனை விசுவாசித்து தேவனுடைய ராஜ்ஜியத்திலே பங்கு அடையுங்கள். இனி காலம் செல்லாது பரலோக இராஜ்ஜியம் சமீபித்து இருக்கிறது. ஆமென்.

  


Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment