Monday, August 1, 2022

அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை

 

கன்மலை கிறிஸ்துவ சபை ஆகஸ்ட் மாத வாக்குத்தத்தம் 

Word of God : Brother Micheal

Date: 01.08.2022

ஆபகூக் 2:3
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.

இந்த ஆகஸ்ட் மாதம் நீங்கள் எவைகளையெல்லாம் எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கிறீர்களோ அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி காத்திருந்த நாட்கள் போதும் அவைகள் நிச்சயமாய் வரும் தாமதிப்பது இல்லை என்று தேவன் வாக்களிக்கிறார்.  

என்ன  அவரிடத்தில் இருந்து வரும் ?

1. நிச்சமாய் ஒத்தாசை வரும் 

சங்கீதம் 121:1
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

சங்கீதம் 121:2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

இந்த மாதம் உங்களுக்கு ஒரு ஒத்தாசை வரும் அது எங்கிருந்து வரும் என்றால் வானத்தையும், பூமியையும் படைத்த கர்த்தரிடத்தில் இருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும். பர்வதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட கர்த்தரிடத்தில் இந்த மாதம் ஒத்தாசை வரும். 

2. நிச்சயமாய் ஜெயம் வரும் 

நீதிமொழிகள் 21:29
துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.

நீதிமொழிகள் 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

நீதிமொழிகள் 21:31
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

உங்களுக்கு இந்த மாதம் ஜெயம் தாமதிப்பது இல்லை. ஜெயம் நிச்சயமாய் வரும். கிதியோன் கேட்கிறார் இஸ்ரவேலை ரட்சிக்க நீர் என்னோடு இருக்கிறீர் என்பதை நான் எதினாலே அறிவேன். கர்த்தருடைய தூதரானவர் அடையாளங்கள் மூலமாக கிதியோனுக்கு உறுதிப்படுத்துகிறார். பெரிய ஜெயத்தை கர்த்தர் கிதியோனுக்கு முன்னூறு பேர்களை கொண்டு கொடுத்தார். சிறிய கூட்டத்தை வைத்து கர்த்தர் கிதியோனுக்கு ஜெயத்தை கொடுத்தார். நீங்கள் ஜெயம் பெற முடியாத படி இருக்கிற எல்லா காரியங்களிலும் கர்த்தர் இந்த மாதம் ஒரு ஜெயத்தை கொடுக்கப்போகிறார். அது நிச்சயமாய் வரும் அது தாமதிக்காது. 

3. நிச்சயமாய் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்  

ஏசாயா 27:6
யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.

ஆதியாகமம் 26:11
பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான்.

ஆதியாகமம் 26:12
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு பலனால் நிரப்புகிற நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். நமக்கு ஒரு பலன் தரும் படியாக இந்த மாதம் கர்த்தர் சித்தம் கொண்டுள்ளவராய் இருக்கிறார். இந்த மாதம் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து நூறு மடங்கு பலனை காணும்படியாக கர்த்தர் செய்வார். நீண்ட காலமாய் வேறாய் இருந்த வாழ்க்கைக்கு பூத்து குலுங்கி உலகத்தை பலனால் நிரப்பும் நாட்கள் வந்து இருக்கிறது. நீங்கள் விதைத்ததை கர்த்தர் பார்த்து இருக்கிறார். அவர் நிச்சயமாய் ஆசீர்வதித்து பலனை அளிப்பார். நீங்கள் கையிட்டு எல்லா காரியங்களிலும் கர்த்தர் நூறு மடங்கு பலனை அளிக்க வல்லவராய் இருக்கிறார். 

4. நிச்சயமாய் பரிசுத்த ஆவி உன் மேல் வரும் 

லூக்கா 1:35
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; 

அப்போஸ்தலர் 2:3
அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

அப்போஸ்தலர் 2:4
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

இந்த மாதம் பரிசுத்த ஆவியானவர் பலமாய் வருவதை காண்பீர்கள். உன்னதமானவரின் பலம் உங்கள்மேல் நிழலிடும். நீங்கள் வாஞ்சையாய் கூப்பிடும் பொழுது பரிசுத்த ஆவியானவர் பலமாய் உங்கள் மேல் வந்து இறங்குவார். இந்த மாதம் பரிசுத்த ஆவியானவர் நிரப்பப்பட்டு பற்பல பாஷைகளை பேசும்படியாக செய்வார் நெடு நாளாய் பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்காய் காத்திருக்கிற உங்கள் மீது இந்த மாதம் நிச்சயமாய் பெற்றுக்கொள்ளும்படியாக கர்த்தர் செய்வார். 

5. நிச்சயமாய் நன்மை வரும் 

யோபு 22:21
நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.

எரேமியா 24:6
அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.

எரேமியா 24:7
நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

நீங்கள் யாவரோடும் பழகி சமாதானமாய் இருக்கும்பொழுது நன்மை வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்களிடத்தில் பேசாதவர்களிடத்திலும் நீங்கள் ஒப்புரவாகி பேசும் பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் படியாக கர்த்தர் அவர் கண்களை உங்கள் மேல் வைப்பார். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் என்று எழுதப்பட்டு இருக்கிறது. நிச்சயமாய் உங்களுக்கு நன்மையுண்டாகும்படியாக செய்வார். 



Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment