Sunday, May 22, 2022

கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 22.05.2022

சங்கீதம் 40:17
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.

இந்த உலகத்திலே யார் உங்களை நினைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆனால் எப்பொழுதும், நம் ஆண்டவர்  எந்நேரமும் உங்களை நினைத்து கொண்டே இருக்கிறார் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம். நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் அவர் உங்களை நினைத்து இருக்கிறார். சிறுமையும், எளிமையாய் இருக்கிற நம் மீது கர்த்தர் நினைவாய் இருக்கிறார்.

 எதற்காக கர்த்தர் நம் மேல் நினைவாய் இருக்கிறார் ?

1. கர்த்தரோ எனக்கு ஆதரவாய் இருந்தார் - ஆகாரம் அருளும்படியாக  

II சாமுவேல் 22:19
என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

ஆதியாகமம் 47:17
அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.

ஆதியாகமம் 48:15
அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

கர்த்தர் எப்பொழுதும் நம் மீது ஆதரவாய் இருக்கிறார். ஆதரவு கிடைக்க வேண்டிய இடத்தில் ஒரு வேலை ஆதரவு கிடைக்காமல் இருக்காமல் இருக்கலாம். சோர்ந்து போக வேண்டாம் நம் இயேசு நமக்கு ஆதரவு தருபவராக இருக்கிறார். யாக்கோபு சொல்லுகிறார் நான் சிறு வயது தொடங்கி இது வரைக்கும் கர்த்தர் எனக்கு ஆதரவாய் இருந்தார் என்று. இன்றைக்கு கர்த்தர் உங்களை நினைத்து இருக்கிறபடியினாலே அவர் உங்களுக்கு ஆதரவை தந்து வழிநடத்தப்போகிறார். உங்களுடைய வீட்டிலே இனி எதற்கும் குறைவு இல்லாதபடிக்கு ஆகாரத்தினால் ஆதரித்து திருப்தியாக்க போகிறார். உங்கள் பண்டகசாலை முழுவதும் நிரம்பி ஓடத்தக்கதாக கர்த்தர் செய்வார்.  

2. கர்த்தரோ எனக்கு உதவி செய்தார் - ஒத்தாசை அனுப்பும்படியாக  

சங்கீதம் 118:13
நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார்.

சங்கீதம் 121:1
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

சங்கீதம் 121:2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

வாழ்க்கையில் பல காலங்களில், பல நேரங்களில் சிறு வயது முதற்கொண்டு உதவியே அற்று திரிந்த நமக்கு கர்த்தர் பல காரியங்களில் இந்நாள் வரை உதவி செய்து இருக்கிறார். வானத்தையும், பூமியையும் படைத்த கர்த்தரிடத்தில் இருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும் ஏன் அவர் உங்கள் மேல் நினைவாய் இருக்கிறார். உங்கள் எப்பொழுதும் அவர் தள்ளாடவொட்டார். 

3. கர்த்தரோ எனக்கு கிருபை வைத்தார் - தயவு கிடைக்கும்படியாக

ஆதியாகமம் 39:21
கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.

கர்த்தர் யோசேப்போடே இருந்து அவன் கிருபை சிறைச்சாலை தலைவனிடத்தில் அவனுக்கு தயவு கிடைக்கும்படியாக செய்தார் என்று நாம் இங்கே பார்க்கிறோம். இந்த உலகத்திலே எல்லாரிடத்தில் நமக்கு தயவு வேண்டியதாய் இருக்கிறது. மனுஷ குமாரனுக்கே ஒரு தயவு வேண்டியதாய் இருந்தது. உங்களுக்கும் மனுஷர் கண்களுக்கு முன்பதாக கர்த்தர் தயவு கிடைக்க செய்வார். யோசேப்புக்கு எப்படி சிறைச்சாலை தலைவனிடத்தில் தயவு கிடைத்ததோ அதுபோல கர்த்தர் உங்களுக்கும் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிற சமூகத்தில் தலைவனாக இருக்கிறவர்களிடத்தில் உங்களுக்கு ஒரு தயவு கிடைக்கும் படியாக செய்வார். 

4. கர்த்தரோ எனக்கு துணை நின்றார் -  விசேஷித்தவனாக்கும்படியாக

II தீமோத்தேயு 5:17
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

கர்த்தர் மாத்திரமே நமக்கு எப்பொழுது துணையாக இருக்கிறார். அவர் துணையில்லாவிட்டால் எப்பொழுதோ வீழ்ந்து போய் இருப்போம். கர்த்தர் வலதுபாரிசத்திலே இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை என்று நாம் வேதத்திலே வாசிக்கிறோம். கர்த்தரை எப்பொழுது எனக்கு முன்பதாக வைத்து இருக்கிறேன் நான் அசைக்கப்படுவதில்லை என்று தாவீது சொல்லுகிறார். கர்த்தர் யோசேப்புக்கு துணையாக இருந்து அவனுக்கு சிறைச்சாலையிலே மெல்லிய வஸ்திரத்தை அனுப்பி அவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து இராஜாவினிடத்தில் கொண்டு வந்து சேர்த்து கர்த்தருடைய துணை எந்த மனுஷனும் அவனுக்காக பரிந்து பேச வில்லை கர்த்தரே யோசேப்போடே இருந்து பரலோகத்தின் காரியங்களை அவனுக்கு வெளிப்படுத்தி பேசத்தக்கதாக ஒரு விசேஷித்த ஆவியை அவனுக்குள் வைத்தார். யாரும் எனக்கு துணை இல்லையே என்று கலங்க வேண்டாம் கர்த்தரே உங்களுக்கு துணையாக இருப்பார். உங்களை விசேஷித்தவர்களாக மாற்றுவார். 

5. கர்த்தரோ எனக்கு நீதிக்குத்தக்க பதில் அளித்தார் -  உயர்த்தும்படியாக 

II சாமுவேல் 22:21
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

யோசேப்பு சுத்தமுள்ளவராக இருந்தார் தன்னை கறைபடாமல் தன் பரிசுத்தத்தை காத்து கொண்டார் கர்த்தர் யோசேப்பின் நீதிக்கு தக்கதாக பதில் அளித்தார். உங்களுடைய நீதி ஒருநாளும் அழிந்து போவதில்லை. யோசேப்புக்கு அவன் சொன்னது போல எல்லா அரிக்கட்டுகளும் எனக்கு முன்பதாக வணங்கி நின்றது அன்றைக்கு நிறைவேறியது. கர்த்தர் யோசேப்பை எதிபத்திலே அதிகாரியாக வைத்து உயர்த்தி வைத்தார் அதுபோல உங்களுக்கும் அவர் நீதிக்கு தக்கதாக பதில் அளித்து உங்களை உயர்த்துவார். 








Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment