Sunday, March 6, 2022

என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்

 

Kanmalai Christian Church

Date: 06.03.2022

Word of God: Brother Micheal

ஆதியாகமம் 16:13
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

எவ்விடத்திலே அவர் நம்மை கண்டார் ?

ஆதியாகமம் 16:6
அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.

ஆதியாகமம் 16:7
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:

ஆதியாகமம் 16:8
சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.

ஆதியாகமம் 16:9
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.

ஆதியாகமம் 16:10
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.

ஆதியாகமம் 16:11
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.

அகார் தன்னுடைய வனாந்திர சூழ்நிலையில் இந்த வார்த்தையை சொல்லுகிறார் நீர் என்னை காண்கிற தேவன்  என்று. கணவர் அவளை மறந்துவிட்டார், தன் நாச்சியார் அவளை புறக்கணித்துவிட்டாள். ஆனாலும் அகார் யார் என்னை காணாவிட்டால் ஆண்டவரே நீர் என்னை காண்கிற தேவன் என்று சொல்லுகிறாள். இன்றைக்கு உங்களுடைய எங்கே போகிறோம், எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற நிலையில் இருக்கிறதா வனாந்திரத்தில் போய் கொண்டு இருக்கிற உங்களை கர்த்தர் இன்றைக்கு காண்கிறார். ஆகாருக்கு கர்த்தர் வனாந்திரத்திலே கர்த்தர் எப்படி இருந்தாரோ அது போலவே அவர் உங்களோடும் இருப்பார். அவர் உங்களின் வனாந்திர பாதையில் வாக்குத்தத்தை அனுப்பி உங்களை தேற்றுவார்.  

1. இந்த சந்ததியிலே நீதிமானாக உன்னை கண்டார் - கிருபையை அளிக்கும்படியாக

ஆதியாகமம் 7:1
கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.

ஆதியாகமம் 6:8
நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

ஆதியாகமம் 8:20
அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

இந்த சந்ததியிலே நம்மை கர்த்தர் நீதிமானாக கண்டு இருக்கிறார். நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது இன்றைக்கு நாமும் இதுவரைக்கும் நிர்மூலம் ஆகாமல் இருப்பது கர்த்தருடைய கிருபையே இல்லையென்றால் நாம் என்றைக்கோ மறித்து போய் இருப்போம். இயேசு தாமே நமக்காக விலையேறப்பெற்ற இரத்தத்தை விலை கிரயமாக கொடுத்து நம்மை நீதிமான்கள் ஆக்கி இருக்கிறார். நீதிமான் எதற்கும் அஞ்சமாட்டேன். அவனுடைய அஸ்திபாரம் என்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. நாம் நீதிமானாக இருக்க விரும்பினால் தேவனுக்காக வைகிராக்கியமாக ஓடுகிற ஓட்டத்தை ஒருபொழுதும் நிறுத்தக்கூடாது. நோவாவைப்போல கடினமாக உழைக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  நோவா தான் பேழையை விட்டு இறங்கினவுடன் கர்த்தருக்காக பலிபீடத்தை கட்டினார். அதுபோல இன்றைக்கு நாமும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தருக்காக பலிபீடத்தை கட்டி எழுப்ப வேண்டும். 

2. அத்திமரத்தின் கீழே உன்னை கண்டார் - நீ பெரிதானவைகளை காணும்படியாக 

யோவான் 1:46
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.

யோவான் 1:47
இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

யோவான் 1:48
அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.

யோவான் 1:49
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

யோவான் 1:50
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.

மத்தேயு 3:11
மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

யோவான் 21:11
சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

நாத்தான்வேல் இயேசுவை அறிவதற்கு முன்பாகவே அவனை கர்த்தர் கபடற்ற உத்தம இஸ்ரவேலனாக அத்திமரத்தின் கீழே கண்டார். அதுபோல ஒன்றும் இல்லாமல் அத்திமரத்தின் கீழ் இருந்த நம்மை தேவன் கபடற்ற உத்தம இஸ்ரவேலனாக நம்மை கண்டு இருக்கிறார்.  இன்றைக்கு கர்த்தர் உங்கள் விசுவாசத்தை பார்க்கிறார். அவர்கள் கண்டு விசுவாசித்தார்கள் நாம் அவரை காணாது இயேசுவை விசுவாசிக்கிறோம். தேவனிடத்தில் நாம் விசுவாசமாக இருக்கும் பொழுது இதிலும் பெரிதானவைகளை காணும் படியாக கர்த்தர் செய்வார். எல்லா அடைக்கப்பட்ட வாசல்களை கர்த்தர் உங்களுக்காக திறந்து பெரிதும் அநுகூலமான கதவை வைத்து இருக்கிறார். பெரிய காரியங்களை கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலே செய்வார். தேவன் நம்மை கண்டு இருக்கிறார் அவர் நம்மை கைவிடவே மாட்டார்.   
3. பெத்சாயிதா ஊரிலே உன்னை கண்டார் - உன் கண்கள் திறக்கப்பட்டு சொஸ்தமாகும்படியாக 

மாற்கு 8:22
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

மாற்கு 8:23
அவர் குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.

மாற்கு 8:24
அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.

மாற்கு 8:25
பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.

மாற்கு 8:26
பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

ஆதியாகமம் 1:27
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

பெத்சாயிதா என்னும் ஊரில் அந்த குருடன் வாழ்ந்து கொண்டு வந்தார். அங்கு இருக்கிற மனுஷர்கள் இயேசுவை காணும்படியாக வந்திருந்த பொழுது அந்த குருடனையும் இயேசுவிடத்தில் கொண்டு அவனை சொஸ்தமடைய செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். அவர் அந்த குருடனை தனியாக ஒரு கிராமத்திற்கு கொண்டு சொஸ்தப்படுத்துகிறார். அவர் அவனுடைய கையை பிடித்து அழைத்துக்கொண்டு போய் குணமாக்கினார். 

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை மண்ணினாலே சிருஷ்டித்தார். இங்கேயும் இயேசு தம்முடைய உமிழ் நீரை மண்ணில் பிசைந்து அந்த குருடனின் கண்களில் தடவினார். அவன் தெளிவாக பார்வை அடையும் படியாக செய்தார். அந்த குருடனுக்கு மண்ணினாலே கண்ணை உருவாக்கினார். இதுவரை காணாமல் இருந்த அவனை தன்னையே காணும்படியாக அவ்விடத்திலே இயேசு செய்தார். அதுபோல நம்மையும் கர்த்தர் தெளிவாக காணும்படியாக நம் மனக்கண்களை இன்றைக்கு திறப்பார். 





For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment