Tuesday, March 1, 2022

எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது

 

கன்மலை கிறிஸ்துவ சபை மார்ச் மாத வாக்குத்தத்தம் 

Word of God : Brother Micheal

Date: 01.03.2022


ஏசாயா 60:1

எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

வெகு நாட்களாக உங்களை எழும்பி பிரகாசிக்க கூடாதபடிக்கு வைத்து இருக்கிற இருளை இந்த மாதம் கர்த்தர் உங்களை பிரகாசிக்கபண்ணபோகிறார்.  உங்களை பிரகாசிக்கப்பண்ணும்படியாக கர்த்தருடைய ஒளி உங்கள் மேல் இந்த மாதம் உதித்தது. அது சாதாரண ஒளி அல்ல எந்த மனுஷனையும் பிரகாசிபிக்கிற கிறிஸ்து இயேசுவின் மெய்யான ஒளி. 

1. கர்த்தரே தம் மகிமையினால் உங்களை பிரகாசிக்கப்பண்ணுவார் 

வெளி 22:4

அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.

வெளி 22:5

அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

வெளி 22:6

பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.

வெளி 21:23

நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

தேவனாகிய கர்த்தர் தாமே உங்கள் மேல் இந்த மாதம் பிரகாசிப்பார். கர்த்தர் உங்களை பிரகாசிக்கிற நாட்கள் வந்து இருக்கிறது. இதோ உங்கள் மேல் கர்த்தருடைய ஒளி வந்து இருக்கிறது எழும்பி பிரகாசியுங்கள். இனி இராக்காலமிராது, விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் இனி உங்களுக்கு வேண்டுவதில்லை கர்த்தரே உங்கள் மேல் பிரகாசிப்பார்.  உங்கள் ஜீவியத்திற்கு கர்த்தரே வெளிச்சமாய் இருப்பார்.  

2. மகிமையின் அறிவாகிய ஒளியை உங்கள் இருதயத்திலே பிரகாசிக்கப்பண்ணுவார் 

II கொரிந்தியர் 4:5

நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.

II கொரிந்தியர் 4:6

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

உங்கள் இருதயத்தில் இருக்கிற பாரங்களை, சஞ்சலங்களை, கர்த்தர் இந்த மாதம் நீக்கி கர்த்தருடைய மகிமையின் அறிவாகிய ஒளி உங்கள் இருதயங்களில் பிரகாசிக்கும். இந்த மாதம் கர்த்தர் புதிதான இருதயத்தை உங்களுக்குள்ளே சிருஷ்டிப்பார். 

3. சூரியனைக்காட்டிலும் அதிகமான ஒளியால் உங்களை பிரகாசிக்கப்பண்ணுவார் 

அப்போஸ்தலர் 26:10

அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன்.

அப்போஸ்தலர் 26:11

சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியபட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.

அப்போஸ்தலர் 26:12

இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது,

அப்போஸ்தலர் 26:13

மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.

அப்போஸ்தலர் 26:14

நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

சூரியனை காட்டிலும் அதிகமான ஒளி இந்த மார்ச் மாதம் உங்களுக்காக வர இருக்கிறது. உங்கள் வேறு மனிதராய் மாற்றும் படியாக வர இருக்கிறது. அந்த ஒளி தான் சவுலை பவுலாக மறுரூபம் ஆக்கியது. இந்த மாதம் அதிகமான பிரகாசமான ஒளி உங்களுக்குள் வரப்போகிறது. அது நன்பகல் சூரியனைக்காட்டிலும் அதிகமாய் பிரகாசிக்கும் ஒளி அந்த ஒளி உங்கள் மாத்திரம் மட்டும் அல்ல உங்கள் நிமித்தமாக உங்களை சுற்றி இருக்கிறவர்களையும் பிரகாசிக்கப்பண்ணும். கர்த்தர் எல்லோருக்கும் பயன்படத்தக்கதாய் உங்களை மாற்றி பிரகாசிக்கப்பண்ணுவார். 

4. அவர் உன் கல்லுகளை பிரகாசிக்கப்பண்ணுவார் 

ஏசாயா 54:10

மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 54:11

சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,

ஏசாயா 54:12

உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.

நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கிற கல்லானது கிருபை. அது சீயோனிலே அஸ்திபாரமாக வைக்கப்பட்டு இருக்கிறது. அவரை நமக்கு தலைக்கு மூளைக்கல்லாய் இருக்கிறார். உலகம் உங்களை தள்ளலாம், சிறுமைப்படுத்தலாம், பெருங்காற்றிலே அடிப்பட்டவர்கள் போல இருக்கலாம், ஒருவரும் இல்லாது திக்கற்ற சூழ்நிலையில் இருக்கலாம் ஆனாலும் அவர் உங்கள் கல்லுகளை பிரகாசிக்கும்படி வைத்து நீலரத்தினங்களை அஸ்திபாரம் ஆக்குவார். உங்களுக்குள் இருக்கிற அபிஷேகத்தை கர்த்தர் எழுப்பி உங்களை பிரகாசிக்கவைக்க போகிறார்.  மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் அவர் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமல் இருக்கும். 

5. அவர் உன் முகத்தை பிரகாசிக்கப்பண்ணுவார் 

யாத்திராகமம் 34:28

அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

யாத்திராகமம் 34:29

மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

யாத்திராகமம் 34:30

ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.

யாத்திராகமம் 34:31

மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான்.

சங்கீதம் 31:16

நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.

மோசே சீனாய் மலையிலே நாற்பது நாட்கள் அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் கர்த்தருடைய சமூகத்திலே தரித்திருந்தார். மோசேயோடு கர்த்தர் பேசினதால் தன்னுடைய முகம் பிரகாசமாய் இருக்கிறதை அவர் அறியாது இருந்தார். இஸ்ரவேல் புத்திரர் அதைகாணும்பொழுது மோசேயிடம் வர பயந்தார்கள். இந்த மாதம் கர்த்தர் உங்கள் முகத்தை பிரகாசிக்கப்பண்ணுவார். உங்களுக்குள்ளே இருக்கிறவர் கிறிஸ்து இயேசு அவரே உங்கள் முகத்தை பிரகாசிக்கப்பண்ணுவார். ஒருவரும் மேற்கொள்ள முடியாது பயப்படுவார்கள். இயேசு கிறிஸ்துவின் முகத்தின் பிரகாசம் உங்களிடத்தில் பிரகாசிக்கும். 




For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment