Monday, March 21, 2022

உன்னை நிச்சயமாக விடுவிப்பேன்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Kamal

Date: 20.03.2022

எரேமியா 39:18

உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

சங்கீதம் 70:5

நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

ஏசாயா 50:2

மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ?

நம்முடைய தேவன் விடுதலை அளிக்கிறவர், அவரே விடுதலையின் நாயகன் பாவிகளை விடுவித்து இரட்சிக்கவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனுஷ குமாரனாக இந்த பூமியில் உதித்தார். நீங்கள் கடந்து போய் கொண்டு இருக்கிற சூழ்நி7லைகளில் தேவன் உங்களை நிச்சயமாக விடுவிக்க வல்லவராய் இருக்கிறார் சோர்ந்து போக வேண்டாம், நம் பாவங்கள், வியாதிகள், வேதனைகள், வறுமைகள், பாடுகள், சாபங்கள், எதுவாக இருந்தாலும் சரி கர்த்தர் உங்களை விடுவிக்க போகிறார். நீங்கள் அவரையே நம்பினபடியால் பட்டயத்திற்கு இரையாவதில்லை அவர் உங்களை நிச்சயமாக விடுவிப்பார். உங்களை விடுவிக்கக்கூடாத படிக்கு கர்த்தருடைய கரம் குறுகி போகவில்லை ஏற்ற வேளையில் அவர் நிச்சயம் விடுதலைதருவார். உங்கள் எல்லாவிதமான மேற்கொள்ளமுடியாத சூழ்நிலைகளில் இருந்தும் கர்த்தர் நிச்சயமாகவே விடுதலை அளிப்பார்.  

1. எகிப்தியரின் சுமையில் இருந்து உங்களை விடுவிப்பார் 

யாத்திராகமம் 6:6

ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,

யாத்திராகமம் 6:7

உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

மத்தேயு 11:30

என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் மீது எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி அவர்களுக்கு விடுதலை அளித்த தேவன் இன்றைக்கு பிசாசானவன் நம் மீது நாம் எழும்ப கூடாதபடிக்கு அவன் வைத்து இருக்கும் சுமைகளை கர்த்தர் இன்றைக்கு நீக்கி உங்களை விடுவிப்பார். நீங்கள் எப்படிப்பட்ட பாரமான சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் சரி கர்த்தர் இன்றைக்கு அந்த சுமைகளை எல்லாம் நீக்கி விடுதலை தருவார். கர்த்தர் மேல் உங்களை பாரத்தை எல்லாம் வைத்து விடுங்கள். அவர் உங்களுக்கு இளைப்பாறுதலை தருவார். அவருடைய சிலுவையை எடுத்துக்கொண்டு அவரை பின்பற்றி வாருங்கள், அவருடைய நுகம் மெதுவாயும் சுமை இலகுவாக இருக்கும். 

2. பலவான்கள், பகைஞ்சர்களிடம் இருந்து உங்களை விடுவிப்பார் 

II சாமுவேல் 22:18

என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.

II சாமுவேல் 22:19

என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

II சாமுவேல் 22:20

என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

உங்களை நெருக்குகிற பலத்த சத்துருக்களுக்கும், பகைஞ்சர்கள் கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார், அவர்கள் இடறிவிழுவார்கள். உங்களை விழத்தள்ள நினைத்தாலும் கர்த்தர் உங்களை உயரத்தில் இருந்து தூக்கி எடுத்து  விசாலமான இடத்திலே கொண்டு வந்து வைத்து உங்களை தப்புவிப்பார். 

3.  சிறையிருப்பின் தேசத்தில் இருந்து உங்களை விடுவிப்பார்

எரேமியா 46:27

என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.

II நாளாகமம் 6:36

பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில்,

II நாளாகமம் 6:37

அவர்கள் சிறைப்பட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,

II நாளாகமம் 6:38

தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணினால்,

II நாளாகமம் 6:39

உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும்.

எரேமியா 33:7

நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து,

எரேமியா 33:11

இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும்: சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

நீங்கள் எப்படிப்பட்ட சிறையிருப்பில் இருந்தாலும் சரி கர்த்தர் அந்த சிறையிருப்பை திருப்பி உங்களுக்கு விடுதலையை தரப்போகிறார். ஒரு வேலை  நம்முடைய மீறுதல்களின் நிமித்தமாக கூட சிறையிருப்பில் சிக்கி தவிக்கலாம், பிசாசானவன் எப்படியாகிலும் நமக்கும் ஆண்டவருக்கும் இருக்கிற ஐக்கியத்தை பிரித்து நம்மை வஞ்சித்து  நம்மை சிறையிருப்பின் தேசத்திற்குள்ளே கொண்டு போய் விடுகிறான். உங்களுடைய சிறையிருப்பின் தேசத்தில் இருந்து நீங்கள் உணர்வு அடைந்தவர்களாக மனம்திரும்பி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணும் பொழுது அவர் நம்மை கேட்டருளி நம் பாவங்களை மன்னித்து நம்முடைய சிறையிருப்பின் தேசத்தில் இருந்து நம்மை விடுவித்து முன் இருந்தது போல நம் ஜீவியத்தை மறுபடியும் கர்த்தர் கட்டுவார்.

4. இக்கட்டில் இருந்து உங்களை விடுவிப்பார் 

நீதிமொழிகள் 11:8
நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.

சங்கீதம் 107:6
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

சங்கீதம் 34:19
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

கர்த்தர் நீதிமானை ஒருபோது தள்ளாட விடுவதே இல்லை, அவன் இருளிலே இருந்தாலும் கர்த்தர் நீதிமானை வெளிச்சத்திலே கொண்டு வருவார். நமக்கு அநேக இக்கட்டுகள், நெருக்கங்கள், துன்பங்கள், உபத்திரவங்கள் வந்தாலும் கர்த்தர் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்க வல்லவராய் இருக்கிறார், நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாய் இருக்கும் ஆனாலும் அவை எல்லாவற்றில் இருந்தும் கர்த்தர் அவனை விடுவிப்பார் என்று நாம் வாசிக்கிறோமே, இந்த உலகத்திலே நமக்கு உபத்திரவங்கள் உண்டு ஆனாலும் நீங்கள் திடன்கொள்ளுங்கள் உலகத்தை ஜெயித்த கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார் அவர் எல்லா இடுக்கண்களில் இருந்தும் உங்களை விடுவிப்பார்.

5.  பொல்லாத உலகத்தில் இருந்து உங்களை விடுவிப்பார் 

கலாத்தியர் 1:4
அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;

II கொரிந்தியர் 4:4
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

II கொரிந்தியர் 4:5
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிற இந்த உலகம் பொல்லாததையும், மிகுந்து கேடுள்ளதாயும் துணிகரத்தால் நிறைந்து காணப்படுகிறது, இப்படிப்பட்ட பொல்லாத இந்த பிரபஞ்சத்தில் இருந்து நம்மை விடுவிக்கவே இயேசு கிருஸ்து பிதாவினுடைய சித்தத்தின் படி நம்முடைய பாவங்களுக்காக தம்மைத்தாமே கல்வாரி சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார். இந்த உலகத்தின் அதிபதியானவன் அநேகரை கிறிஸ்துவின் மகிமையான சுவிஷேசத்தின் ஒளி தெரியாத படிக்கு அநேகரை குருடாக வைத்து இருக்கிறான். ஒருவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. நீங்கள் இந்த உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். நீங்கள் இந்த உலக காரியத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆண்டவருக்காக வேறுபிரிக்கப்பட்டவர்கள். கர்த்தருடைய மகிமையின் அறிவாகிய ஒளி உங்களை இருதயங்களிலே பிரகாசித்து இருக்கிறது, எழும்பி பிரகாசியுங்கள் உங்களை ஒளி வந்து கர்த்தருடைய ஒளி உங்கள் மேல் உதித்தது இன்னும் அநேகரை கர்த்தர் இந்த பொல்லாத உலகத்தில் இருந்து விடுவிக்க கர்த்தர் உங்களை பயன்படுத்துவார். 




For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment