Sunday, February 20, 2022

இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு

 

Kanmalai Christian Church

Word of God: Brother Kamal

Date:20.02.2022


ரூத் 3:18
அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.

பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பிலிப்பியர் 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

ரூத் நகோமியிடம் போவாஸ் தனக்கு செய்ததை எல்லாம் அறிவித்தபொழுது நகோமி ரூத்தை பார்த்து இந்த காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியும் மட்டும் பொறுத்திரு போவாஸ் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். பிரியமான தேவ ஜனமே என் காரியம் என்னமாய் முடியும் என்று உள்ளத்திலே கலங்கி கொண்டு இருக்கிறீர்களா சோர்ந்து போகவேண்டாம் பொறுமையோடு தேவனை நோக்கி காத்திருங்கள் உங்கள் காரியத்தை ஜெயமாய் முடிக்கும் வரை நம்முடைய தேவன் இளைப்பாறமாட்டார். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் உங்கள் காரியத்தை தேவனுக்கு தெரியப்படுத்துங்கள் கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். 

1. கடினமான காரியத்தை தேவனிடத்தில் கொண்டு வாருங்கள் 

உபாகமம் 1:17
நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

மாற்கு 10:27
இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில காரியங்கள் மேற்கொள்ள கடினமாக தோன்றலாம் நம் சுயபெலத்தால் அது முடியாது உங்களுக்கு எந்த காரியம் கடினமாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா அந்த காரியத்தை தேவனிடத்தில் கொண்டு வாருங்கள். அவர் உங்கள் காரியத்தை கேட்பார், அதற்கு தீர்வுகாண தேவன் உங்களுக்கு உதவி செய்வார். தேவனாலே எல்லாம் கூடும். பலத்தினால் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல கர்த்தருடைய ஆவியினாலே ஆகும்

2. உன் காரியத்தை கேட்டு உன் விருப்பத்தின் படி செய்வார் 

I இராஜாக்கள் 5:8
ஈராம் சாலொமோனிடத்தில் மனுஷரை அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுருமரங்களுக்காகவும், தேவதாரி விருட்சங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன்.

சங்கீதம் 20:4
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

கர்த்தர் தம்முடைய ஆலயத்தை கட்டும்படியாக சால்மோனை தெரிந்து கொண்டார். சாலமோன் கேதுரு மரங்களை வெட்டுவதற்கு தனக்கு ஆட்களை கொடுத்து உதவி செய்யுமாறு சாலமோன் தீருவின் ஈராமிடத்தில் கேட்டுக்கொள்கிறார். ஈறாம் அந்த காரியத்தை நான் கேட்டேன். கேதுருமரங்களுக்காகவும், தேவதாரி விருட்சங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன் சொல்லுகிறார். கேதுரு மரம் உகந்த வாசனையை தரக்கூடியது உயரமான லீபனோனில் வளரும் அத்தகைய மரத்தை பயன்படுத்தி கர்த்தருடைய ஆலயத்தை மகிமையாய் சாலமோன் காட்டினார். அப்படிப்பட்ட மேலான காரியத்திற்காக சாலமோன் ஈரமிடத்தில் உதவி கேட்டார்.

நாமும் இன்றைக்கு தேவனிடத்தில் நம்முடைய சாரீரமாகிய ஆலயத்தை கட்ட சிறந்த மேலான காரியங்களை தேவனிடத்தில் கேட்டு பெற்று கொள்ள வேண்டும். மேலானவைகளையே நாடுங்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதே மேலான வல்லமை, மேலான வரங்களை நாட வேண்டும் அதனை வாஞ்சித்து தேவனிடத்தில் கேட்கும்பொழுது அவர் நிச்சயமாய் உங்களுடைய மேலான கேதுருமரங்களுக்காகவும், தேவதாரி விருட்சங்களுக்காகவும் உங்கள் மனவிருப்பதின் படி செய்வார் அவர் உங்கள் மனவிருப்பத்தின் படி உங்களுக்கு தந்தருளி உங்கள் ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

3. எழும்பி காரியத்தை நடப்பியுங்கள் கர்த்தர் உங்களோடே கூட இருக்கிறார் 

I நாளாகமம் 22:13
கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

I நாளாகமம் 22:14
இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.

I நாளாகமம் 22:15
வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும், கல்தச்சரும், எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள்.

I நாளாகமம் 22:16
பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.

ஏசாயா 60:22
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

இங்கே தாவீது சாலமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்தை கட்ட கட்டளை கொடுக்கிறார், சாலமோனை கர்த்தருடைய ஆலயத்தை கட்டும்படியாக உற்சாகப்படுத்துகிறார், கர்த்தருடைய ஆலயத்திற்காக அநேக பொன், வெள்ளி, வெண்கலம் மற்றும் அதற்கான வேலையாட்களை சவதரித்து வைத்துள்ளேன் நீ இன்னும் மேலாக சவதரிப்பாய் எனவே நீ எழும்பி காரியத்தை நடப்பி கர்த்தர் உன்னோடே கூட இருக்கிறார் என்று தாவீது சாலமோனிடத்தில் சொல்லுகிறார். 

இந்த காரியத்தை செய்யலாமா வேண்டாமா என்று உள்ளத்திலே குழம்பி கொண்டு இருக்கிறீர்களா நீங்கள் எழும்பி தைரியமாய் காரியத்தை நடப்பியுங்கள் சாலமோனுக்கு அவருடைய காரியத்தில் துணை நின்ற கர்த்தர் உங்களுக்கும் துணை செய்வார். 

4. காரியத்தை கர்த்தரிடத்தில் சாட்டிவிடுங்கள் 

எரேமியா 20:11
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.

எரேமியா 20:12
ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.

சங்கீதம் 55:22
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

கர்த்தர் பயங்கர பாராக்கிரமசாலியாய் என்னோடு கூட இருக்கிறார். எனவே நீங்கள் எதற்கும் அஞ்சவேண்டாம் உங்களை ஒடுக்கினவர்கள், சிறுமைப்படுத்தினவர்கள், துன்படுத்தினவர்கள் உங்களை மேற்கொள்ள முடியாமல் இடறுவார்கள் அவர்களுக்கு நித்திய இலச்சை உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார். நம்முடைய தேவன் நீதி செய்கிற தேவன் ஆகையால் உங்களை காரியத்தை அவரிடத்தில் சாட்டிவிடுங்கள் கர்த்தர் பார்த்துக்கொள்வார், உங்கள் கவலைகள் பாரங்கள் யாவற்றையும் கர்த்தர் மேல் வைத்து விடுங்கள், அவர் உங்களை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார். 

5. நீதியோடே சீக்கிரமாய் காரியத்தை நிறைவேற்றுவார் 

ரோமர் 9:28
அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.

ரோமர் 15:28
இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.

யோபு 23:14
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.

கர்த்தர் சீக்கிரமாய் நீதியோடே உங்கள் காரியத்தை நிறைவேற்றி முடிப்பார், அவர் உங்களுக்கு என்று குறித்து வைத்து இருக்கிறதை ஏற்றவேளையில் நிச்சயம் நிறைவேற்றி முடிப்பார். கர்த்தர் உங்கள் காரியத்தை நிறைவேற்றி அதன் பலனை பத்திரமாய் உங்கள் கையிலே ஒப்புவிப்பார், கர்த்தர் செய்ய நினைத்தது ஒரு பொழுதும் தடைப்படாது. 





For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment