Kanmalai Christian Church
Word of God : Pas. Micheal
Date: 24.03.2024
லூக்கா 19:34
அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
1. கழுதைக் குட்டி ஆண்டவருக்கு வேண்டும்
கட்டவிழ்த்து, வஸ்திரம் கொடுத்து மகிமையை பயன்படுத்துவார்
லூக்கா 19:30
உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
லூக்கா 19:31
அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
லூக்கா 19:32
அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.
லூக்கா 19:33
கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
லூக்கா 19:34
அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
லூக்கா 19:35
அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
நாம் அனைவரும் ஒரு தருணத்தில் இந்த கழுதைக் குட்டியை போல தான் கட்டப்பட்டு இருந்தோம். நம் ஆணடவராகிய இயேசு கிறிஸ்து நம்மை அவருக்கு வேண்டும் என்று சொல்லி நம்மை கட்டவிழ்த்து அவரிடத்தில் சேர்த்து கொண்டார். தேவன் நம்மை கட்டவிழ்த்து, நம் மேல் வஸ்திரங்களை போட்டு நம் ராஜாவாகிய கிறிஸ்து நம்மை நடத்தி கொண்டு வருகிறார். நம் எல்லோருக்கும் தேவன் ஒரு தரிசனத்தை வைத்து இருக்கிறார் அதின் பாதையில் நடத்த அவர் வல்லவராய் இருக்கிறார். அந்த கழுதைக் குட்டியின் மேல் ஏறி ஆண்டவர் பயணித்த போது அதற்கு எப்படி ஒரு கனம் கிடைத்ததோ அது போல நமக்கும் கனத்தை கொடுத்து , வஸ்திரத்தை கொடுத்து உங்களை மகிமையாய் பயன்படுத்துவார்.
2. தாழ்மையும், கனமும் ஆண்டவருக்கு வேண்டும்
நம்மை செழித்திருக்கும்படியாய் செய்வார்
லூக்கா 19:36
அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
மத்தேயு 21:8
திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
ஏசாயா 11:1
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
அவர் இயேசு எருசலேமுக்கு போகையில் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களையும் அதின் கிளைகளையும் கீழே பரப்பி அதை தரித்து கொண்டார்கள் என்று சொல்லும் பொழுது இதோ இவருக்காக தான் நாங்கள் இத்தனை வருடங்களாய் காத்து இருந்தோம். எங்களை இரட்சிக்க வந்த இயேசு இவர் தான் என்று சொல்லி தங்களை தாழ்த்தி, வெறுமையாக்கி வஸ்திரங்களையும், மரத்தின் கிளைகளையும் பரப்பினார்கள் ஏன் என்றால் வருகிறவர் தாவீதின் குமாரன் ஆனவர், தாவீதின் வேறுமானவர் அந்த கிளை எழும்பி செழிக்கும் என்று வேதத்தில் சொல்லி இருக்கிறபடி அவர்கள் அப்படி செய்தார்கள். இன்றைக்கு உங்கள் வாழ்க்கையை செழிப்பாக்கும் படியாக இயேசு உன்னோடு கூட வருகிறார். உங்களை நீங்கள் அர்பணிப்பீர்கள் என்று சொன்னால் அவருக்கு முன்பதாக உங்கள் பாவ வஸ்திரம், கீழிப்படியாமையின் வஸ்திரம், கோவத்தின் வஸ்திரம், ஆகியவற்றை நீங்கள் கீழே போடுவீர்கள் என்று சொன்னால் தேவன் உங்களுக்கு பரிசுத்த வஸ்திரத்தை உடுத்தி செழித்திருக்கும்படி செய்வார்.
3. பிள்ளைகள், வாலிபர்களின் துதி ஆண்டவருக்கு வேண்டும்
மகிமையாய் வெற்றிச் சிறக்கப்பண்ணுவார்
மத்தேயு 21:15
அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,
மத்தேயு 21:16
அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
இயேசு எருசலேமுக்கு வரும் பொழுது பிள்ளைகள், வாலிபர்களின் வாயினில் துதி உண்டாகி தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று தேவாலயத்தில் ஆர்பரித்தார்கள் என்று நாம் இங்கே பார்க்கிறோம். தேவன் பிள்ளைகள், வாலிபர்களின் துதியை அதிகம் விரும்புகிறவராய் இருக்கிறார். இன்றைக்கும் நம் பிள்ளைகள், வாலிபர்கள் ஆர்ப்பரித்து ஆண்டவரை துதிக்கும் பொழுது அவர்கள் வாழ்க்கையை மகிமையாய் வெற்றிச் சிறக்கப்பண்ணுவார்.
4. நம் சரீரமாகிய ஆலயம் ஆண்டவருக்கு வேண்டும்
நம்மை சீர்படுத்திப் பரிசுத்தப்படுத்துவார்
மத்தேயு 21:12
இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:
மத்தேயு 21:13
என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.
மத்தேயு 21:14
அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
மாற்கு 11:11
அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார்.
மாற்கு 11:15
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,
மாற்கு 11:16
ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்:
மாற்கு 11:17
என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து விற்கிறவர்களையும், கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டார், காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து போட்டார். என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்னப்படும் சொல்லி இருக்கிறது ஆனால் நீங்களோ அதை கள்ளர் குகை ஆக்கினீர்களே என்றார். உங்கள் பெலன் தேவன் மாத்திரமே அதை விற்று விடாதீர்கள். பரிசுத்த ஆவியை விட்டு விடாதீர்கள். இன்றைக்கு ஆண்டவர் இருக்க வேண்டிய இடத்திலே நீங்கள் வேறு எதற்கும் இடம் கொடுக்காதீர்கள். நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம், இன்றைக்கும் நாம் தேவனிடத்தில் திரும்புவோம் என்று சொன்னால் அவர் நம்மை சீர்ப்படுத்தி, பரிசுத்தப்படுத்துவார். இயேசு சவுக்கை எடுத்து எல்லாரையும் துரத்திவிட்டார் அனால் குருடர்கள், சப்பாணிகள் மாத்திரம் ஆலயத்தில் இருந்தார்கள் இயேசு அவர்களை சொஸ்தப்படுத்தினார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. குருடர்கள் என்று சொன்னால் தரிசனம் இல்லாதவர்களை குறிக்கிறது, ஒரு வேலை நீங்கள் தரிசனத்தை இழந்து தேவாலயத்தில் இருப்பீர்கள் என்று சொன்னால் நீங்கள் மீண்டும் அந்த தரிசனத்தில் பாதையில் தொடர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். சப்பாணி எதை குறிக்கிறது என்றால் தனக்கு எல்லாம் தெரிந்து இருந்தும் வசனம் தெரிந்து இருந்தும் இயேசு யார் என்று தெரிந்து இருந்தும், தேவ அபிஷேகத்தை பெற்று இருந்தும், தேவ சித்தத்தை செய்யாமல் ஒரே நிலையில் இருக்கிறவர்களை குறிக்கிறது. அப்டி ஒரு வேலை இந்த குருடர்கள், சப்பாணிகளை போல நாம் இருப்போம் என்று சொன்னால் கர்த்தரை நம்மை உயிர்ப்பிக்க வல்லவராய் இருக்கிறார்.
Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment