Sunday, January 1, 2023

நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன்

 

கன்மலை கிறிஸ்துவ சபை 2023 வாக்குத்தத்தம் 

Word of God: Pastor Micheal

Date: 01.01.2023

எபிரெயர் 6:14
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.

இந்த ஆண்டு முழுவதும் கர்த்தர் உங்களை நிச்சயமாகவே ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து பெருகவே பெருகப்பண்ணுவார். இந்த வருடம் முழுவதும் ஒரு பெருக்கத்தை தேவன் உங்களை காணும்படியாக செய்வார். 

பெருக்கத்தின் ஆண்டு 

அவர் எதை இந்த ஆண்டு நமக்கு பெருகப்பண்ணுவார் ?

1. மந்தையை (சபையை) பெருகப்பண்ணுவார் 

எசேக்கியேல் 36:35
பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

எசேக்கியேல் 36:36
கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.

எசேக்கியேல் 36:37
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.

எசேக்கியேல் 36:38
பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டு வருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.

ஆதியாகமம் 17:1
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.

ஆதியாகமம் 17:2
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

முதலாவது கர்த்தர் சபைக்கு சொல்லுகிறதாவது மந்தை பெருகுகிறது போல மனுஷரை பெருகப்பண்ணும்படியாக நமக்கு இந்த ஆண்டு அநுக்கிரகம் செய்யப்போகிறார். தேவன் அவருக்கும் நமக்கும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திவிட்டார்.  நிச்சயமாகவே இந்த ஆண்டு சபையை மிகவும் திரளாய் பெருகப்பண்ணுவார்.   

2. கிருபையை பெருகப்பண்ணுவார் 

எபேசியர் 1:5
பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,

எபேசியர் 1:6
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.

எபேசியர் 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

எபேசியர் 1:8
அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.

கர்த்தர் இந்த ஆண்டு நமக்கு கிருபையை பெருகப்பண்ணுவார். அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் கிருபையை உங்களிடத்தில் பெருகப்பண்ணுவார். 
 
3. பெலனையும், சத்துவத்தையும் பெருகப்பண்ணுவார் 

ஏசாயா 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

ஏசாயா 40:27
யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?

ஏசாயா 40:28
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.

ஏசாயா 40:29
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

ஏசாயா 40:30
இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.

ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

இந்த ஆண்டு கர்த்தர் உங்கள் பெலனை பெறுக செய்யப்போகிறார். கர்த்தருக்கு காத்திருக்கிற உங்களுக்கு கர்த்தர் புது பெலனை தந்து ஆசீர்வதிக்கப்போகிறார். கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்த எழும்பும் படியாக கர்த்தர் உங்களை பெலனை பெருகச்செய்வார். 
 
4. மகிழ்ச்சியை பெருகப்பண்ணுவார்  

ஏசாயா 9:1
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.

ஏசாயா 9:2
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

ஏசாயா 9:3
அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.

இந்த ஆண்டு கர்த்தர் நமக்கு மகிழ்ச்சியை பெறுக பண்ணப்போகிறார். ஈனப்படுத்தியவர்கள் கண்களுக்கு முன்பதாக உங்கள் ஸ்தானத்தை கர்த்தர் உயர்த்தப்போகிறார். உங்கள் மகிழ்ச்சி அறுப்பில் மகிழ்கிறது போலவும், பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும் இருக்க போகிறது. 

5. சந்ததியை பெருகப்பண்ணுவார் 

ஆதியாகமம் 26:5
நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

ஆதியாகமம் 22:17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

ஆதியாகமம் 22:18
நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

அவர் உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களை போல திரளாய் பெருகப்பண்ணுவார். உங்கள் சந்ததிக்குள் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று கர்த்தர் அவர் பேரில் ஆணையிட்டு விட்டார்.நிச்சயம் அவர் நம் சந்ததியை பெருகவே பெருகப்பண்ணுவார். 






Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment