Monday, September 19, 2022

நான் உன்னை வெறுத்துவிடவில்லை

 

Kanmalai Christian Church

Word of God : Brother Micheal

Date: 18.09.2022

ஏசாயா 41:8
என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,

ஏசாயா 41:9
நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

மனுஷர்கள் நம்மை வெறுக்கலாம் ஆனால் கர்த்தர் சொல்லுகிறார் நான் உன்னை வெறுத்து விடவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.  உங்களையும், உங்கள் குடும்பத்தையும் வெறுத்து விடவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏன் என்றால் நீங்கள் அவர் சிநேகிதனாகிய ஆபிரகாமின் சந்ததியாய் இருக்கிறோம். அவர் எப்படி உங்களை வெறுக்க முடியும். அவர் பூமியின் கடையாந்திரங்களில் இருந்து எடுத்து, அதின் எல்லைகளில் இருந்து அழைத்து வந்தார். அவர் உங்களை ஒருபோதும் வெறுத்து விடவே மாட்டார். 

1. பயப்படாதே - அவர் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவார் 

ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசாயா 41:11
இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

ஏசாயா 41:12
உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.

நீங்கள் பயப்படவேண்டாம், கர்த்தர் உங்களுடனே கூட இருக்கிறார், அவர் நம் தேவன் அவர் உங்களை பெலப்படுத்தி சகாயம் பண்ணுவார். நீதியின் வலது கரத்தினாலே உங்களை தங்குவார். அவருடைய நீதியின் கரம் உங்களை தாங்கி வழிநடத்தப்போகிறது. நீங்கள் பயப்படவேண்டாம் கர்த்தர் உங்களுடனே இருக்கிறார் ஏன் என்று சொன்னால் அவர் உங்களை வெறுத்து விடவில்லை.  

2. பயப்படாதே - அவர் வலது கையைப்பிடித்து துணைச்செய்கிறார் 

ஏசாயா 41:13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

ஏசாயா 41:14
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

ஏசாயா 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

ஏசாயா 41:16
அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய்.

ஏசாயா 41:17
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

யாருமே துணை இல்லை என்று கலங்கி கொண்டு இருக்கிறீர்களா ? கர்த்தர் சொல்லுகிறார் அவர் உங்கள் வலது கையைப்பிடித்து நான் துணை நிற்கின்றேன் என்று சொல்லுகிறார். அவர் நீதியின் வலது கரத்தினால் தாங்குவது மட்டும் அல்ல அவர் தன் கையை உங்களோடு கூட பிடித்து உங்களுக்கு துணை செய்து வழிநடத்த விரும்புகிறார். எல்லா இடங்களில் கர்த்தர் துணையாக நிற்பதை நீங்கள் காணப்போகிறீர்கள். அவர் நம்மை மீட்கிறவர், அவர் நம்மை மீட்டு நம் காயங்களை கட்டி, நம்மேல் மனதுருகி நம்மை தன்னுடைய சுய வாகனத்தில் ஏற்றி பராமரிப்பார். யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படவேண்டாம் கர்த்தர் துணை நிற்கிறார். அவர் உங்களை போரடிக்கிறதற்கு புதிதும் கூர்மையும் உள்ள எந்திரமாய் ஆக்குவார். நீங்கள் மலைகளை மிதித்து, நொறுக்கி குன்றுகளை பதறுக்கு ஒப்பாகி விடுவாய். உங்கள் வாழ்க்கையில் எவைகளை எல்லாம் மலை போல நினைத்து கொண்டு இருக்கிறீர்களோ அவைகளை உங்கள் அபிஷேகம் நொறுக்கு பதறுக்கு ஒப்பாக்கிபோடும். உங்கள் கவலைகளை கர்த்தருடைய சூழல் காற்று பறக்கடிக்கும் நீங்கள் கர்த்தருக்குள் களிகூர்ந்து மேன்மைபாராட்டுவீர்கள். உங்களை விட்டு விலகாதவர் சொல்ல்லுகிறார் அவர் உங்களை கைவிடமாட்டார்.   

3. பயப்படாதே - உன் இருதயத்தின் சந்தேகத்தை நீக்கி ஆச்சரியமாய் வழிநடத்துவார்

லூக்கா 24:37
அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.

லூக்கா 24:38
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

லூக்கா 24:39
நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

லூக்கா 24:40
தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

லூக்கா 24:41
ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.

நீங்கள் பயந்து, கலங்குகிறது என்ன ? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறது என்ன ? நான் தான் என்று அறியும்படி என் கைகளையும், கால்களையும் பாருங்கள் என்று இயேசு சொல்லுகிறார். பயந்து, கலங்கி இருக்கிற நமக்கு அவர் தம் கைகளையும், கால்களையும் காட்டுகிறார். நமக்காக அவர் கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். நமக்காக எல்லாவற்றையும் சிலுவையில் இயேசு செய்து முடித்து விட்டார் அதை நமக்கு தெரியப்படுத்தும்படியாகத்தான் அவருடைய கைகளையும், கால்களையும் நமக்கு காண்பிக்கிறார். கர்த்தருடைய கால்கள் உன்னை சரியான பாதையில் உன்னை வழிநடத்தும். உங்கள் இருதயத்தில் எழும்பியிருக்கிறதான எல்லா வித சந்தேகங்களுக்கும் கர்த்தர் ஆச்சரியப்படும் விதமாக அவருடைய கைகளையும், கால்களையும் காண்பித்து உங்களை வழிநடத்துவதை நீங்கள் காண்பீர்கள். 









Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment