Kanmalai Christian Church
Word of God : Bro. Kamal
Date : 28.09.2025
உன்னதப்பாட்டு 4:7
என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை
என் பிரியமே நீ பூரண ரூபவதி உன்னில் பழுது ஒன்றுமில்லை. இங்கே நம்முடைய நேசர் மணவாட்டியாகிய தம்முடைய சபையை பூரண ரூபவதி என்று அழைக்கிறதை நாம் காண்கிறோம். மணவாட்டியே உன்னில் பழுது ஒன்றுமில்லை. நம்மை குறித்ததான உலகத்தின் பார்வை வேறாக இருக்கலாம். ஆனால் கர்த்தருடைய பார்வையில் நாம் அவருடைய பரிசுத்த மணவாட்டியாக இருக்கிறோம். அவர் நம்மை பரிசுத்த படுத்தி நம்மை சேர்த்துக்கொள்வார். இங்கேயும் வேதாகமத்தில் நாம் பழுத்தில்லாத பரிசுத்த ஜீவியத்தை காத்து கொண்ட ஒரு ஐந்து நபர்களை குறித்து நாம் இங்கே தியானிக்கலாம். நாமும் அவர்களை போல பரிசுத்த ஜீவியத்தில் நிலைத்திருக்க தேவன் நமக்கு கிருபை செய்வாராக.
உன்னில் பழுதொன்றுமில்லை
1. உத்தமத்தை காத்துக்கொண்ட யோபு
யோபு 1:1
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
யோபு 2:3
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.
யோபு 2:9
அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்.
யோபு 31:6
சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
சங்கீதம் 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
II நாளாகமம் 19:11
நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.
யோபு உத்தமன் என்று தேவனே சாட்சி கொடுக்கிறார். யோபு தன்னுடைய எல்லா சூழ்நிலையிலும் தேவன் பேரில் இருந்த உத்தமத்தில் உறுதியாய் இருந்தார். உத்தமனுக்கு கர்த்தர் துணை நிற்கிறார். நாமும் யோபுவை போல உத்தமத்தில் நடக்க நாடுவோம். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு கர்த்தர் நன்மையை தருகிறார். நமக்கும் தேவன் உத்தமத்தில் ஜீவிக்க துணையாய் இருப்பார்.
2. கபடற்ற உத்தம இஸ்ரவேலனாய் இருந்த நாத்தான்வேல்
யோவான் 1:45
பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
யோவான் 1:46
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
யோவான் 1:47
இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
யோவான் 1:48
அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.
யோவான் 1:49
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
யோவான் 1:50
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.
மத்தேயு 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.
நாமும் நாத்தான்வேலை போல கபடற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. அவ்வாறு நாம் இருக்கும் போது பெரிதானவைகளை தேவன் நம்மை காணச்செய்வார்.
3. தேவனுக்கு பிரியமானவராய் இருந்த தானியேல்
தானியேல் 6:16-23
தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.
தானியேல் 9:23
நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.
III யோவான் 1:2
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
தானியேல் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவராக தன்னை காத்து கொண்டார் ஆகவேதான் சிங்க கெபியில் அவரை தள்ளினாலும் தேவன் சிங்கத்தின் வாய்களை கட்டிப்போட்டார். தானியேலை தேவன் தனக்கு மிகவும் பிரியமானவர் என்று சாட்சிகொடுக்கிறார். இன்றைக்கும் நாம் தானியேலை போல ஒரு ஜெப ஜீவியம் நமக்கு இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். நீங்கள் கர்த்தருக்கு முன்பாக குற்றமற்றவராக இருக்கும் பொழுது தேவன் எல்லாவற்றில் வாழ்ந்து சுகித்திருக்கும்படியாக செய்வார்.
4. தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற தாவீது
அப்போஸ்தலர் 13:22
பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.
வெளி 3:20
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
நீதிமொழிகள் 7:1
என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
நீதிமொழிகள் 7:2
என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
நீதிமொழிகள் 7:3
அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள்.
தாவீதை கர்த்தர் தன்னுடைய இருதயத்திற்கு ஏற்றவராக கர்த்தர் கண்டார். ஏன் என்றால் அவர் தேவன் சித்தத்தை எல்லாம் செய்து முடிக்கிறவராக இருந்தார். என் தாவீதுக்கு நான் பொய் சொல்லேன். அவர் தாவீதுக்கு எதையும் மறைத்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு ஜீவியம் நமக்கும் காணப்படவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். நாமும் தேவனுடைய சித்தத்தை அறிந்து, அவர் கட்டளைகளை கைக்கொண்டு அதன்படி நடப்போம் என்று சொன்னால் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவராக இருப்போம்.
5. பழுதற்ற பலியாய் நமக்காய் தம்மை ஒப்புக்கொடுத்த இயேசு
யோவான் 19:4
பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.
மத்தேயு 27:4
குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
லூக்கா 23:41
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
லூக்கா 23:47
நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
இங்கே இயேசு குற்றமற்றவர் என்று அநேகர் சாட்சி கொடுக்கிறதை நாம் காண்கிறோம். அவர் நமக்காக பழுதற்ற பலியானார். அவர் நமக்காக சிலுவையில் மரண பரியந்தம் தம்மை தாழ்த்தினார். பிதா அவரை அவருக்கு எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை வழங்கினார். நாம் பரிசுத்தமாகும் படி அவர் நமக்காக பலியானார். நாமும் நம்மை கர்த்தருக்கு முன்பாக பழுது அற்ற பலியாக நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம். தேவனுக்கென்ற பரிசுத்த மணவாட்டியாக நம்மை காத்துக்கொள்வோம்.
Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment