Saturday, June 1, 2024

நீ இப்பொழுது காண்பாய்

 

கன்மலை கிறிஸ்தவ சபை ஜூன் மாத வாக்குத்தத்தம்

Word of God : Pas. Micheal

Date: 01.06.2024

எண்ணாகமம் 11:23
அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.

கர்த்தருடைய கை குறுகி போயிற்றோ அவர் சொன்ன வாக்குத்தத்தங்கள் எல்லாம் என் வாழ்க்கையில் நடக்குமோ, நடக்காதோ அதற்கான சூழ்நிலைகள் காணப்படவில்லையே என்று கலங்கி கொண்டு இருக்கிறீர்களா? இந்த மாதம் நிச்சயம் நம் ஜெபத்திற்கு தேவன் பதில் தருவார். எவரையும் மேன்மைப்படுத்த கர்த்தருடைய கரத்தினால் ஆகும், ஆம் கர்த்தர் கரம் உங்கள் சார்பில் இருந்த செயலாற்றப்போகிறதை இந்த ஜூன் மாதம் நீங்கள் காண்பீர்கள். 

1. தேவனுடைய மகிமையை காண்பாய்

யோவான் 11:38
அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.

யோவான் 11:39
இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.

யோவான் 11:40
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.

யோவான் 11:41
அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

யோவான் 11:42
நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.

உபாகமம் 33:29
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

இந்த மாதம் நீங்கள் விசுவாசத்தால் தேவனுடைய மகைமையை காண்பீர்கள். அவர் உங்களுக்கு மகிமைப் பொருந்தின பட்டயமாக இருந்து சகாயம் செய்வார். 

2. பெரிதான கிரியைகளை காண்பாய்

யோவான் 1:48
அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.

யோவான் 1:49
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

யோவான் 1:50
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.

யோவான் 5:19
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.

யோவான் 5:20
பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.

இந்த மாதத்தில் தேவன் நம்மை இதிலும் பெரிதானவைகளை காணும்படியாக செய்வார். அவர் தம்முடைய பெரிதான கிரியைகளை நமக்கு காண்பிப்பார். நாம் முழு நிச்சயமாய் விசுவாசிப்போம் என்று சொன்னால் நிச்சயமாக பெரிதான காரியங்களை தேவன் வாய்க்கப்பண்ணுவார். 

3. சமாதானத்தை காண்பாய்

சங்கீதம் 128:6
நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

லேவியராகமம் 26:6
தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.

லேவியராகமம் 26:7
உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

லேவியராகமம் 26:8
உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

லேவியராகமம் 26:9
நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.

இந்த மாதத்தில் தேவன் நம்மை சமாதானத்தை காணுபடியாக செய்வார். நம்முடைய தேசத்திலே சமாதானத்தை கட்டளையிடுவார். துஷ்டன் உங்கள் வழியாய் கடந்து வருவதில்லை, கர்த்தர் சத்துருக்களை முன்னின்று துரத்துவார். எல்லா சத்துருவின் கிரியைகளையும் நமக்கு முன்பாக விழும்படியாக கர்த்தர் செய்வார். தேவன் உங்கள் மேல் கண்ணோக்கமாய் இருந்து உங்கமேல் அவர் உடன்படிக்கையை திடப்படுத்துவார். 

4. நிறைவான பலனை காண்பாய்

சங்கீதம் 91:7
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.

சங்கீதம் 91:8
உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.

ரூத் 2:12
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும் எதுவும் இந்த மாதம் உங்களை அணுகுவதில்லை நீங்கள் பலனை காணும்படியாக கர்த்தர் செய்வார். உங்கள் செய்கைக்கு தக்க பலனை தேவன் இந்த மாதம் உங்களுக்கு கட்டளையிடுவார். 

5. இரட்சிப்பை காண்பாய்

சங்கீதம் 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

யாத்திராகமம் 14:13
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

யாத்திராகமம் 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.

இந்த மாதம் முழுவதும் கர்த்தர் உங்களை திருப்தியாக்கி அவருடைய இரட்சிப்பை உங்களுக்கு காண்பிப்பார். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.







Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment