Monday, November 14, 2022

பொய்யுரையாத தேவன்

 

Kanmalai Christian Chruch

Word of God: Pastor Jachin Selvaraj

Date: 13.11.2022

தீத்து 1:3

பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு அற்புதங்களும், அதிசயங்களும் உண்டாகும். கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து அவரை விசுவாசித்து, அவரையே நம்பி நம்மை ஒப்புக்கொடுக்கும் பொழுது தேவன் நம்மை நிச்சயாமாகவே ஆசீர்வதிப்பார் ஏனென்றால் அவர் பொய் உரைக்காத தேவனாய் இருக்கிறார். மனுஷன் பேசுகிற வார்த்தைகள் மாறலாம். ஆனால் தேவன் சொன்ன வார்தைகள் ஒவ்வொன்றும் என்றுமே மாறாது அது என்றைக்கும் நிலைத்திருக்கும். 

எண்ணாகமம் 23:19

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

எண்ணாகமம் 23:20

இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.

தேவன் நம்மை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னால் அதை கண்டிப்பாக செய்வார். தேவன் நம் வாழ்க்கையில் பெரிய காரியத்தை செய்வேன் என்று சொன்னால் அதை கண்டிப்பாக செய்வார். நம் ஆண்டவர் பொய் சொல்லுகிற தேவனே அல்ல. பொய் சொல்ல தேவன் மனுஷன் அல்ல மனம் மாற்றிக்கொள்ள மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ, தேவன் தம் பிள்ளைகளின் வாழிக்கையிலே ஒரு காரியத்தை செய்வேன் என்று சொன்னால் அதை நிச்சயம் செய்வார். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பாலும், தேனும் ஓடுகிற கானானுக்குள் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று சொன்னார். ஆனால் இஸ்ரவேல் புத்திரரின் கீழ்ப்படியாமையின் நிமித்தமாக அது அங்கு எல்லாராலும் போக முடியாமல் போய் விட்டது.  

I சாமுவேல் 15:29

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.

I சாமுவேல் 15:24

அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.

I சாமுவேல் 15:23

இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

சாமுவேல் தீர்க்கதரிசி சொன்ன காரியத்தை சவுல் சரியாக கீழ்ப்படியவில்லை. சவுல் சாமுவேலிடம் நான் ஜனங்களுக்கு பயந்து அவர்கள் சொல்லுக்கு கீழ்ப்படிந்தேன் அன்றி  கர்த்தரிடத்தில் இருந்து  தீர்க்கதரிசியாகிய உம்மிடத்தில் வந்த வார்த்தையை கேட்காமல் போனேன். நான் பாவம் செய்தேன். சாமுவேல் சவுலிடம் நீர் கர்த்தருடைய வார்த்தையை புறக்கணித்தபடியினால் நீர் இஸ்ரவேலிலே ராஜாவாய் இராதபடிக்கு கர்த்தர் உன்னை புறக்கணித்தார் என்று சொன்னார்.  

ஆதியாகமம் 22:17

நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

ஆதியாகமம் 22:14

ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

கர்த்தர் ஆபிரகாமுக்கு உன்னை ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவேன் என்று முன்னமே வாக்களித்து விட்டார். அப்படி இருக்க தம் ஒரே குமாரனை எனக்காக பலியிடு என்று சொன்னதும் ஆபிரகாம் மறு வார்த்தை பேசாமல் கர்த்தர் சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார். ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த படியால் நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதித்து கடற்கரை மணலை போல பெருகப்பண்ணுவேன் என்று ஆசீர்வதிக்கிறார் . நம் வாழ்க்கையிலும் சிறு சோதனை வந்தாலும் நாம் ஏன் எனக்கு இந்த பாடு ? ஏன் எனக்கு இந்த போராட்டம் ? என்று கேட்கிறோம். நாம் விசுவாசத்தில் ஆபிரகாம் போல இறுதி வரை நிலைத்து நிற்க வேண்டும். 

எண்ணாகமம் 14:1

அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.

எண்ணாகமம் 14:2

இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.

நீதிமொழிகள் 10:22
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

நீதிமொழிகள் 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.

கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐஸ்வரியத்தை தரும், கர்த்தர் ஆசீர்வதிக்க ஆரம்பித்து விட்டால் நமக்கு வேதனை எல்லாமே நீங்கி விடும். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான் நாம் செய்ய வேண்டிய காரியம் விசுவாசத்தை விட்டுவிட கூடாது, ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்து நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுக்க வேண்டும். தினம் வேதத்தை வாசித்து, ஜெபம் செய்து கர்த்தரோடு நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் உண்மையாய் ஆண்டவரை தேடுவீர்கள் என்று சொன்னால் நீங்கள் செய்கிற காரியத்தை எல்லாம் தேவன் வாய்க்கச்செய்வார். 

நீதிமொழிகள் 22:9
கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.

யோசுவா 1:8
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.

யோசுவா 1:9
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

யாத்திராகமம் 3:12
அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

மல்கியா 3:17
என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.

கர்த்தருடைய வேத வசனம் நம் வாயைவிட்டு பிரியாது இருக்க வேண்டும். அதில் எழுதி இருக்கிறபடியெல்லால் நாம் செய்ய கவனமாய் இருக்க வேண்டும். இரவும், பகலும் அதை தியானித்து கொண்டு இருக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் நம் வழிகள் எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணுவார். கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளை நாம் கீழ்ப்படிந்து அதன்படி நடப்போம் என்று சொன்னால் நம்மை அவர் வாலாக்காமல் தலையாக்குவார் , கீழாகமல் மேலாக்குவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பிதாவாகிய தேவனுக்கு கீழ்ப்படிந்தார் எனவே பிதா அவர் நாமத்தை எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் கொடுத்து இயேசு கிறிஸ்துவை உயர்த்தி வைத்தார். 





Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment