Kanmalai Christian Church
Word of God : Sis. Lydia
Date: 12.05.2024
வெளி 2:7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
மத்தேயு 13:16
உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
மத்தேயு 13:17
அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
வெளி 2:2
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
வெளி 2:3
நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
வெளி 2:4
ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
வெளி 2:5
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுறதை காதுள்ளவன் கேட்கக்கடவன். ஆவியானவர் நமக்கு சொல்லுகிற ஆலோசனைகளை எல்லாம் நாம் கேட்டு அதன்படி நடக்கிறவர்களாக இருப்போம் என்று சொன்னால் நாம் முற்றிலும் ஜெயம்கொள்ளுகிறவர்களாக இருக்க முடியும். கேட்கிற உணர்வுள்ள இருதயத்தை நாம் தேவனிடத்தில் வாஞ்சிக்க வேண்டும். உங்கள் கிரியைகளை, பிரயாசங்களை, பொறுமையை தேவன் அறிந்து இருக்கிறார். ஆண்டவரின் நாமத்தின் நிமித்தம் ஒரு இளைப்பாறுதல் இல்லாமல் பிரயாசப்பட்டதையும் தேவன் அறிந்து இருக்கிறார், ஆனாலும் நாம் ஆதியிலே ஆண்டவர்பேரில் இருந்த அன்பை தற்பொழுது விட்டோம் என்று நம் பேரில் குறை உண்டு என்று ஆண்டவர் சொல்லுகிறார். எந்த நிலையில் விழுந்தோம் என்பதை நிதானித்து அறிந்து அதனை சரிசெய்து ஆண்டவரோடு கூட ஒப்புரவாகி ஆதியில் செய்த கிரியை செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். நாம் மனம் திரும்பி அவரோடு கூட நெருங்குவோம் என்று சொன்னால் தேவன் நமக்கு ஜெயமுள்ள ஒரு ஜீவியத்தை அளிப்பார். இங்கேயும் ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு தேவன் என்னென்ன தருகிறார் என்பதை நாம் காண்போம்.
ஜெயம்கொள்ளுகிறவர்களுக்கு
1. ஜீவவிருட்சத்தின் கனியைத் தருகிறார்
வெளி 2:7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
2. இரண்டாம் மரணம் சேதப்படுத்துவதில்லை
வெளி 2:11
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
3. மறைவான மன்னாவை அளித்து புதிய நாமத்தை கொடுப்பார்
வெளி 2:17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
4. விடிவெள்ளி நட்சத்திரத்தை கொடுப்பார்
வெளி 2:26
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
வெளி 2:27
அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
வெளி 2:28
விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
5. வெண் வஸ்திரம் தரிப்பித்து நாமத்தை அறிக்கையிடுவார்
வெளி 3:5
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment